தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2020, 7:18 PM IST

ETV Bharat / state

டாஸ்மாக் திறப்பு குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்!

நாமக்கல்: கரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் விற்பனை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டு சென்றார்.

கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்!
கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை விபரங்கள் ஊரடங்கு தளர்விற்குப் பிறகு உள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.

கரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, "நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்தால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 210 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போது மின் தேவை குறைவாக உள்ளதாலும், போதிய மின்சாரம் உள்ளதாலும், எந்த பிரச்சனையும் இல்லை.

மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ல் குறிப்பிட்டுள்ள இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு அரசு ஏற்று கொள்ளாது" எனத் தெரிவித்தார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி

தொடர்ந்து பேசிய அவர், புதிய மின்சார திருத்தச்சட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், மாநிலத்திற்குப் பாதிப்பான எந்த சட்டத்தையும் இந்த அரசு ஏற்காது எனவும் தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் கடைகள் திறப்பு மற்றும் விற்பனை குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்.

இதையும் பார்க்க: மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details