கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து 3 அடி முதல் 6 அடி இடைவெளி விட்டு கடைகளில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் ஆங்காங்கே தடுப்பு வலைகள் அமைத்து தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள தனியார் மருந்து கடையில் சமூக இடைவெளி இல்லாமல் கடைக்கு முன்பு 50க்கும் மேற்பட்டவர்கள் மருந்துகளை வழங்கியதை அலுவலர்கள் கண்டறிந்தனர்.