தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராசிபுரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது - பட்ட பகலில் ராசிபுரத்தில்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 5, 2022, 10:47 PM IST

நாமக்கல்:ராசிபுரம் 4 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பரிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட்டுடன் வந்த இளைஞர் ஒருவர், தாலி சங்கிலியைப் பறித்து சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசாரிடத்தில் அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை

இந்நிலையில், வாகன சோதனையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய ஒருவரை சந்தேகித்த போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில் அவர் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பதும், அவரே செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அப்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்கூலுக்கு லீவு போட புதிய ரூட்டு - விழுப்புரம் சிறுவனின் வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details