நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகேயுள்ள மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கெளரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் புகழ்வின் என்ற மகன் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் சுரேஷ் தனது மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து மனைவி, மகனை கொலை செய்த குற்றத்திற்காக எருமப்பட்டி காவல்துறையினர் அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.