தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோயில் தீமிதித் திருவிழா - பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

By

Published : Mar 1, 2023, 10:29 PM IST

நாமக்கல்
நாமக்கல்

நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா - பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுத் திருவிழா, கடந்த மாதம் 12ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மை அழைப்பு நிகழ்ச்சி இன்று(மார்ச்.1) நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தீமிதி விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு 21 அடி நீளத்திலும், 4 அடி அகலத்திலும், தீ இட்டு வைக்கப்பட்டிருந்த குண்டத்தில், தலைமை பூசாரி பூங்கரகத்துடன் இறங்கி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'ஓம்சக்தி, பாரசக்தி' என கோஷமிட்டபடியே தீ மிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த திருவிழாவில் பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக், தனியார் பார்களை அகற்றக்கோரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details