கடந்த 2ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அடுத்துள்ள நடூரில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 17 பேரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாயும், அரசு வேலையும் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இழப்பீடு கேட்டு ஆதி தமிழர் பேரவை போராட்டம்!
நாமக்கல்: மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
In Namakkal protest for crash of the wall
இந்நிலையில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சுற்றுச் சுவர் எழுப்பிய துணிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!