தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 7:58 AM IST

ETV Bharat / state

கிணற்றில் விழுந்து மருத்துவமனை ஊழியர் பலி

நாமக்கல் : ராசிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு
மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த முத்துகாளிபட்டி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). இவர் ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சொந்தமாக விவசாய நிலம் கொண்டிருந்த மணிவேல், தனது விவசாயக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்கு நேற்று (டிச.22) சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கிணற்றில் தவறி விழுந்து மணிவேல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற ராசிபுரம் தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த மணிவேலின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details