தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிற்குள் நுழையும் கழிவுநீர் - ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்திய உரிமையாளர் - Jackie

நாமக்கலில் சாலை கழிவுநீர் வீட்டிற்குள் நுழைவதால், தனது வீட்டை உரிமையாளர் ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் உயர்த்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 13, 2022, 6:56 PM IST

நாமக்கல்:திருச்செங்கோடு சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். அப்பகுதியில், 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இவருடைய வீட்டின் முன் அண்மையில் புதியதாக சாலைகள் போடபட்டுள்ளது. சாலைகள் விட்டின் வாசலை விட உயரமானதால், வீடு 2 அடி கீழே இறங்கியுள்ளது. இதனால், சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை பெய்தால் மழை நீரோடு கலந்து சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டுக்குள் சென்றிருக்கிறது.

இந்நிலையில், இதை எவ்வாறு சரி செய்யலாம் என தங்கவேல் யோசித்துள்ளார். அப்போது, சென்னையைச் சேர்ந்த கோல்டன் பில்டிங் என்ற நிறுவனத்தினர், பழைய கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே ஜாக்கி வைத்து உயர்த்தியும், முன்னும் பின்னும் இடம் நகர்த்தியும் தருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டை சுமார் 4 அடி தூரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் தன் வீட்டை உயர்த்திய வீட்டின் உரிமையாளர்

அதன்படி கட்டிடத்தை 48 நாள்களுக்குள் 4 அடி உயர்த்தி தரவேண்டும் என ஒப்பந்தமும் செய்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி ஆயிரம் சதுர அடிக்கு 15 பணியாளர்கள் 250 ஜாக்கிகள் வைத்து உயர்த்தி தர முடியும் என உறுதி அளித்ததின் பேரில் பணிகள் தொடங்கியது.

அதன்படி பணிகளை தொடங்கிய கட்டிட நிறுவனம் குறிப்பிட்ட நாள்களுக்குள், 4 அடி உயரம் கட்டிடத்தை உயர்த்தி பாதுகாப்பாக அமைத்துக் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து இந்த பணியை பார்வையிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details