கடந்த வாரங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், இன்று (டிச.12) அதிகாலை முதலே நாமக்கல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் மூடு பனி பெய்து வருகிறது. காலை 9 மணி வரை இந்த பனி பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே மூடங்கியுள்ளனர்.
அதேபோல் நெடுஞ்சாலைகளில் செல்லும் சிறிய வாகனம் முதல் கனரக வாகனம் வரை அனைத்தும் குறைவான வேகத்தில், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே மெதுவாக இயக்கப்பட்டன.