தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மாணவர்கள் - அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பறையில் உள்ள கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேசைகள் சேதமடைந்தன.

Government school

By

Published : Oct 15, 2019, 6:48 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டுவரும் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்புவரை என மொத்தமாக 240 மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறை, ஏழாம் வகுப்பறை, பத்தாம் வகுப்பறை ஆகிய கட்டடங்கள் 2008-2009ஆம் ஆண்டு பள்ளி சீரமைப்பு திட்டத்தில் கீழ் மூன்று கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன.

இந்தச் சூழலில் இன்று காலை ஏழாம் வகுப்பறைக்கு மாணவ மாணவியர் வழக்கம்போல் சென்றனர். அப்போது, அங்கிருந்த கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து மேசைகளில் உடைந்து விழுந்திருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து நேற்று நள்ளிரவில் ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்ட குப்புச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளி

இதையடுத்து பாதிப்படைந்த கட்டடத்தில் இருந்த ஏழு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வேறு வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். எனவே மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் உடனடியாக பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவ மாணவியர் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற கட்டடங்களில் மாணவ மாணவிகளை அமரவைத்து வகுப்புகள் எடுக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details