தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற 4 பேருக்கு கரோனா பரிசோதனை! - Namakkal Government contract vehicle Missused

நாமக்கல்: அரசு ஒப்பந்த வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி அனுமதியில்லாமல் நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற 4 பேரை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி கரோனா சோதனைக்கு உட்படுத்தினர்.

Namakkal, government, vehicle, misuse, covid 19, check  அரசு ஒப்பந்த வாகனம் முறைகேடு  நாமக்கல் அரசு ஒப்பந்த வாகனம் முறைகேடு  அரசு ஒப்பந்த வாகனம்  Government contract vehicle  Government contract vehicle Missused  Namakkal Government contract vehicle Missused
Quarantine People

By

Published : May 8, 2020, 12:34 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் 14 எல்லை நுழைவாயில்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, இவர்கள் சென்னை, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அவர்களின் பயண விவரம் மற்றும் உடல் வெப்பநிலையை பொறுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி நுழைவாயிலான பவித்திரம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பவித்திரம் சோதனைச் சாவடி

அப்போது, சென்னை பதிவெண் கொண்ட அரசு ஒப்பந்த வாகனத்தில் மத்திய வருவாய்த் துறை துணை ஆணையர் பெயர் பலகையுடன் சென்னையிலிருந்து வந்த வாகனத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் எந்தவித பயண அனுமதி சான்று இல்லாமல் வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அலுவலர்கள், நான்கு பேரையும் தனிமைப்படுத்தி கரோனோ பரிசோதனை மேற்கொண்டு பவித்ரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாளை முதல் டாஸ்மாக்: காவல் துறை தலைவர் சுற்றறிக்கை

ABOUT THE AUTHOR

...view details