நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடேசன்(33). இவர் குடும்பத்துடன் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் வீடு கட்டி, விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடேசன் தனக்குக் குடிநீர் வசதிக்காக அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீட்டிற்குக் குடிநீர் குழாய் அமைக்கக் குழி தோண்டியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை குழி தோண்டக் கூடாது என மிரட்டி நடேசன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் கற்களைக் கொட்டி பாதையை மறித்துள்ளனர்.
இதனைக் கண்ட விவசாயி நடேசன், சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது இரு தரப்புனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.