நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேளூர்நாடு ஊராட்சி சோளகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிடாரன் (75). இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இதையடுத்து நேற்று முன்தினம் (செப். 27) தனது வயலில் இருந்த காளானை எடுத்து வந்து, மனைவி செல்லாமாள், மகள் பூங்கொடி மற்றும் பேரன் சிவக்குமார் ஆகியோருடன் சமைத்து சாப்பிட்டுள்ளார்.
காளானை சாப்பிட்ட பின் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது விவசாயி பிடாரன் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்த நிலையில், மற்ற மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.