நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் ரூ.5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி ரூ.4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி ஆகும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் இன்று வரை அதாவது 8 நாட்களாக முட்டையின் விலை 5.50 காசுகளாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55 காசுளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நாளை முதல் அமலில் வரும். சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் 75 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வாகும்.