நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரியாக 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கும், மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கடந்த மார்ச் 29ஆம் தேதி ஒரு முட்டை விலை ரூ.3.90 காசாக இருந்தது. அதன் பின்னர், தொடர்ந்து உயர்த்தப்பட்டு தற்போது ரூ.4.60 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் காரணமாக பண்ணைகளில் சுமார் 15 லட்சம் கோழிகள் உயிரிழந்தன.