தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 12:41 PM IST

ETV Bharat / state

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!

நாமக்கல்: கோவிட்-19 வைரஸ் தொற்று வதந்தி காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

egg-prices-fall-to-unprecedented-level-in-four-years/
egg-prices-fall-to-unprecedented-level-in-four-years/

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா கர்நாடகா ஆந்திரா உள்பட பல வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் நோய் காரணமாகவும், கோவிட்-19 வைரஸ் வதந்திகள் காரணமாகவும் கோழி மற்றும் முட்டைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து தற்போது 1.95 ரூபாயாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இந்த விலையானது வருகின்ற 24ஆம் தேதி‌ வரை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை சரிவு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே நாளில் 11 செல்போன்களை திருடிய ஆந்திர இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details