தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார்- பழனிசாமி ஆவேசம்

நாமக்கல்: கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

By

Published : Apr 11, 2019, 6:16 PM IST

Published : Apr 11, 2019, 6:16 PM IST

கொடநாடு விவகாரம்

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். ஆனால் கேரளாவில் இடது சாரியை எதிர்த்து காங்கிரஸ் நிற்கிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால் எப்படி எதிர் அணியால் நல்ல ஆட்சியை தர முடியும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணிகாக்கபட்ட நிலையில் மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க உள்ளனர். ஆகையால் ஸ்டாலின் பொய் பரப்புரை எடுபடாது. அதை நம்ப மாட்டார்கள். பொய்க்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலினுக்குதான் தர வேண்டும்.

கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்" எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details