தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டு வெடிகளைத் தோரணம் கட்டி வெடித்த திமுகவினர் - பொதுமக்கள் அவதி - nammakal crackers issue

நாமக்கல்: பிரதான சாலை சந்திப்பில் நாட்டு வெடிகளைத் தோரணம் கட்டி, வெடித்த திமுகவினரின் செயலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

East dmk crackers
East dmk crackers

By

Published : Feb 7, 2020, 9:09 PM IST

கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, நாமக்கல் வருகை தந்த ராஜேஷ் குமாருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மோகனூர் பரமத்தி சாலை சந்திப்பில் உள்ள, அண்ணா சிலைக்கு ராஜேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

அண்ணா சிலைக்கு ராஜேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்

அப்போது, திமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை சந்திப்பில், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி நாட்டு வெடிகளை இரு சாலைகளுக்கு இடையில் தோரணமாகக் கட்டி, தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.

சாலையில் நாட்டு வெடிகளைத் தோரணம் கட்டி வெடித்த திமுகவினர்

அதிக ஒலி எழுப்பக்கூடிய நாட்டு வெடிகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையில் கட்டி, நீண்ட நேரம் வெடிக்கவிட்டதால், அவ்வழியாக வாகனத்தில் சென்ற பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே சென்றனர்.

இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றி செல்லும் - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details