நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் கலந்துகொண்டு கட்சி தொண்டர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தியூர் செல்வராஜ், “ரஜினி அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. எத்தனை ரஜினி வந்தாலும் எந்த விதத்திலும் திமுகவை பாதிக்காது.