கரோனா காலத்தில் ஏழை மக்கள் அதிகளவு டயாலிசிஸ் செய்ய முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியதோடு பலரும் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு நாமக்கல் யுனெடெட் வெல்பேர் ட்ரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் 500 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்திலும் டயாலிஸ் செய்யும் வகையில் புதிய ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் நாமக்கல்லில் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டு புதிய இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.