நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மெகராஜ், மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் கை கழுவி சுத்தத்தை உறுதி செய்திட வேண்டும், அதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களின் சுத்தத்தினையும் உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சலி, இருமல், தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.