தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் கிலோ அரிசி விநியோகம்! - Rs. Corona Assistance worth Rs 2 lakh

நாமக்கல்: கரோனா நிவாரண உதவியாக நாமக்கல்லில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கிலோ அரிசியை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தியிடம் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் நிவாரண உதவி வழங்கும் காட்சி
மாவட்ட வருவாய் அலுவலரிடம் நிவாரண உதவி வழங்கும் காட்சி

By

Published : Apr 24, 2020, 1:30 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்மையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் விநியோகத்து வருகின்றனர்.

வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் கிலோ அரிசி விநியோகம்

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கிலோ அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தியிடம் வழங்கினர்.

இந்த அரசியை உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க:மருத்துவ மாணவர் சேர்க்கை - தகுதிப் பட்டியலை வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

ABOUT THE AUTHOR

...view details