தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்லிமலை அருவியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு! - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: கொல்லிமலை அருவியில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

college-student-drowns-in-kollimalai-waterfall
college-student-drowns-in-kollimalai-waterfall

By

Published : Oct 28, 2020, 9:49 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலக்குறிச்சி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மகன் ஜீவானந்தம் (21). தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் 11 பேருடன் கொல்லிமலை பள்ளிபாறை அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது பாறையில் தடுமாறி விழுந்து அருகிலிருந்த 15 அடி நீரோடை குட்டையில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்ககாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வாழவந்திநாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details