தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் - ஆட்சியர் ஆய்வு! - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Collector
Collector

By

Published : Dec 14, 2019, 8:12 AM IST

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வாக்குகள் எண்ணப்படும் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரி வாக்கு மையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆட்சியர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுடன் சென்ற அவர், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி வார்டு வாக்குகள், ஊராட்சி ஒன்றிய வார்டு வாக்குகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்டவைகளின் வாக்குகள் எண்ணும் அறைகளை பார்வையிட்டார். அங்கு, அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் எந்தெந்த வழியில் அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செயப்பட்டன.

இதையும் படிங்க: சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details