தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பை அகற்றிய பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டம்! - நாமக்கல் செய்திகள்

நாமக்கல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

protest
protest

By

Published : Jan 9, 2021, 12:43 PM IST

நாமக்கல்லை அடுத்த முத்துகாபட்டி ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாலை விரிவாக்கப்பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ராஜேஷ் என்பவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக முத்துகாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மேதரமாதேவி காலனி கிழக்கு தெருவில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு செந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த தனபால் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, அதனை அகற்றச் சென்றனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனபால் மற்றும் அவரது உறவினர்கள் பொக்லைன் இயந்திரத்தின் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.‌‌

ஆக்கிரமிப்பை அகற்றிய பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டம்!

அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தகாத வார்த்தைகளில் பேசியது என இரண்டு பிரிவுகளில் தனபால், அவரது மனைவி சின்னப்பொன்னு, மகன்கள் தனசேகரன், யுவராஜ் ஆகியோர் மீது சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.50 கோடி மோசடி: திருச்சியில் தம்பதியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details