தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறப்பு! - 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

நாமக்கல்: 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A Baby Born 108 Ambulance in namakkal  A Baby Born 108 Ambulance  108 Ambulance  Namakkal District News  108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை  108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறப்பு
A Baby Born 108 Ambulance in namakkal

By

Published : Dec 25, 2020, 1:58 PM IST

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜசேகரன் (36), பரமேஸ்வரி (30) தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் பரமேஸ்வரி கருவுற்றார்.

பிரசவ வலி

லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் ராஜசேகரன் பணிநிமித்தமாக வெளிமாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பரமேஸ்வரிக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரமேஸ்வரியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆண் குழந்தை

ஆனால், என். புதுப்பட்டி அருகே செல்லும்போது பரமேஸ்வரிக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாக்கியலட்சுமியும் ஓட்டுநர் சந்திரனும் பரமேஸ்வரிக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில், பரமேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:2 தலை, 4 கைகள்: அலிகரில் பிறந்த அதிசய குழந்தை

ABOUT THE AUTHOR

...view details