தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2019, 11:42 AM IST

ETV Bharat / state

8 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல்: கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 3.5 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Namakkal

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில்,தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி, பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்களுடன் மட்டுமே பொருட்கள், பணத்தை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் உரிய ஆவணங்களின்றி பணம், பொருட்கள் எடுத்துச்செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநரிடம் விசாரணை செய்ததில், தாங்கள் ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தங்க நகைகளைசேலத்திலிருந்து மதுரைக்கு எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தனர். வேனையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்,விரிவான விசாரணைக்குப் பிறகேதங்க நகைகள்மீண்டும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.


கடந்த வாரம் இதே பார்சல் நிறுவனத்தினர்நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைஎடுத்து வந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details