நாமக்கல்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 8) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.