நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் நீண்டநாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அக்கிராமத்தை சேர்ந்த திலகர் என்பவர் அங்கு உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்றும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.