நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக நீண்டகாலமாகக் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆத்திரம் அடைந்த காடம்பாடி, மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நகராட்சி ஆணையர் ஏகராஜை கண்டித்து நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு காலிக் குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, நகராட்சி அலுவலகத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் காரணமாக அலுவலகத்தின் உள்ளே இருந்து அலுவலர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும், பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தின் உள்ளே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது.