மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இந்திய முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆட்சிதான் சிறந்த ஆட்சி. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே மு.க. ஸ்டாலின் அளித்த பிரதான வாக்குறுதியில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
நீட் சட்டமும் திருப்பப்பெறப்பட வேண்டும்