தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2019, 11:39 AM IST

ETV Bharat / state

ராமநாதபுரம் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

ராமநாதபுரம்: ஓம் சக்தி நகரில் உள்ள ஆல்வின் மெட்ரிக் பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

first time voters
first time voters

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, மண்டபம் ஆர்.எஸ். மங்களம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கான முதல்கட்டத் தேர்தல், 813 வாக்குச் சாவடிகளில் காலை7 மணிக்கு தொடங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓம் சக்தி நகரில் உள்ள ஆல்வின் மெட்ரிக் பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஐந்து ஒன்றியங்களுக்கு 813 வாக்குச் சாவடிகளில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

ஐந்து ஒன்றியங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 920 வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய உள்ளனர். மண்டல வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

இதையும் படிங்க:

சின்னம் தெரியாமல் வாக்காளர்கள் குழப்பம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details