மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில் உடையார்குளம், பிடாரி குளம், பெரியகுளம், அம்மாகுளம், பாப்பான்குளம், ஆவிகுளம், அல்லிகுளம், அட்டகுளம், ஆண்டிகுளம் மற்றும் இரண்டு குட்டைகள் உள்ளன.
இந்த ஆண்டு, காவிரியிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நீரை நல்லத்துக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்ப வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.