மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 342 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்நிலையில் கூறைநாடு பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் முன்பு பாதாள சாக்கடை குழாய் வழியாக கழிவு நீர் வெளியேறி வழிந்தோடி வருகிறது.
இங்கு வாக்களிக்க வரும் மக்கள் கழிவு நீரை தாண்டியே வாக்குப்பதிவு மையத்தின் உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.