மயிலாடுதுறை அருகே உள்ள கோழிகுத்தியில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாளைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
1,500 ஆண்டுகள் பழமையான வானமுட்டி பெருமாள்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
நாகை: மயிலாடுதுறை அருகே கோழிகுத்தியில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வானமுட்டி பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
வானமுட்டி பெருமாளை தரிசிக்க அலைமோதிய பக்தர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திமர வரதராஜ பெருமாள், மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அனந்த சயனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி எனும் கிராமத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.