கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் உள்ள நூர்ஹலிமா மஸ்ஜீது பள்ளிவாசலில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 44 இஸ்லாமியர்கள் வருடத்திற்கு நான்கு முறை மயிலாடுதுறை வந்து கம்பளி, போர்வை, ஜமுக்காளம், பாய் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.