தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Car accident: சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் நடந்த கார் விபத்து - விபத்து செய்திகள்

மயிலாடுதுறையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளால் கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளால் கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீர்காழி

By

Published : Nov 20, 2021, 5:22 PM IST

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அருகில் கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (51). தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்றுவிட்டு திரும்பும் வழியில் சீர்காழி பைபாஸ் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் எதிர்பாராவிதமாக குறுக்கே வந்ததில் ஏற்பட்ட விபத்தில், சுவாமிநாதனும் அவரது தாயார் பானுமதியும் (70) பலத்த காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் வீட்டில் வைத்து வளர்க்காமல் சாலையில் விட்டுவிடுகின்றனர்.

இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது சுவாமிநாதனின் கார் விபத்துக்குள்ளானதில் மாடுகள் பலியாகியுள்ளன.

இதையும் படிங்க:Tirupattur Flood: வெள்ளத்தில் மூழ்கிய மாதனூர் - உள்ளி இடையிலான தரைப்பாலம்

ABOUT THE AUTHOR

...view details