தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தனிப்பிரிவில் பணியாற்றிவந்த செவிலியருக்கு கரோனா - two medical assistants got corona at Nagapattinam

நாகை: கரோனா தனிப்பிரிவில் பணியாற்றிவந்த செவிலியர் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jun 22, 2020, 2:32 PM IST

கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் நாகை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 202ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனிடையே நாகை அரசு மருத்துவமனையில் கரோனா தனிப்பிரிவில் பணியாற்றிவந்த 36 வயது ஆண், 32 வயது பெண் செவிலியர் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நோய்த்தொற்று ஏற்பட்ட செவிலியர் இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா காலத்திலும் தமிழ்நாட்டிற்கு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details