நாகப்பட்டினம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பல வழக்குகள் பதிவாகி வந்தன. இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர், காணாமல் போன இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து சிசிடிவி பதிவில் இருக்கக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(21), பார்த்திபன்(23) என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது.