தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் - டிடிவி தினகரன்! - TTV Dhinakaran election campaign in Nagapattinam

நாகப்பட்டினம்: தேர்தலுக்காக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பெயரில் அனைத்து சமுதாய மக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவருகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் அமமுக தேர்தல் பரப்புரை கூட்டம்  நாகப்பட்டினத்தில் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை  டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை  டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச்சு  AMMK election campaign meeting In Nagapattinam  TTV Dhinakaran election campaign in Nagapattinam  TTV Dinakaran Talk about Edappadi Palanisamy
TTV Dhinakaran election campaign in Nagapattinam

By

Published : Mar 21, 2021, 12:17 PM IST

நாகப்பட்டினத்தில் அமமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மஞ்சுளா சந்திரமோகனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், "லஞ்ச லாவன்யம் இல்லாத ஆட்சியை உருவாக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ளவும் அமமுகவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்காக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பெயரில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து அனைத்து சமுதாய மக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவருகிறார்" என்றார்.

முன்னதாக வாக்காளர்களை மகிழ்விக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த நடன கலைஞர்கள் குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

இதையும் படிங்க:இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை : டிடிவி தினகரன் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details