தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் பணி! - வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி

நாகை: கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில் பொது மக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி
வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி

By

Published : Jan 7, 2020, 11:52 PM IST

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பயன்தரும் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனை மீட்டெடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகாலத்தூர் கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் பணியாளர்களைக் கொண்டு, கஜா புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி, அதே இடத்திலும் வேறு சில இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி

குறிப்பாக தென்னை, மா, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களை நட்டு அதை முறையாகப் பராமரித்தும் வருகின்றனர். வரும் மூன்றாண்டுகளில் இவைகள் வளர்ந்து பயன்தரும் என அப்பகுதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஒரே நாளில் ரூ. 425 சரிந்த தங்கம் விலை!

ABOUT THE AUTHOR

...view details