மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடி உபரி நீரானது கடலுக்குச் செல்கிறது. ஆற்றின் கரையோர கிராமமான சந்தைப்படுகை, திட்டுப்படுகை, வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பசுக்கள் வழக்கம்போல் இன்று (நவ.12) ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் மேய்ச்சலுக்குச் சென்றன.
ஆற்றிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேறியதால், அங்கிருந்த 27 பசுக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் மணல் திட்டில் சிக்கிக்கொண்டன.