மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று(நவ.4) நடைபெற்றது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,119 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் தியாகி நராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோட்டாட்சியர் யுரேகா, வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.