சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பியில் நூதன ஆர்ப்பாட்டம் - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பியில் நூதன ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3866155-229-3866155-1563373765778.jpg)
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத நியாய விலை கடை, டாஸ்மாக், துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்