நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த எட்டப்பராஜனின் மகன் மாரிச்செல்வம் (36). இவர் இரும்புக்கடையில் ஊழியராகப் பணிபுரிந்தார். இவரது வீட்டின் அருகே நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(24) என்பவர் தெட்சிணாமூர்த்தி என்பவரிடம் குடித்து விட்டு, தகறாரில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தெருவில் வருவோர், போவோரை எல்லாம் அநாகரிகமாக பொதுவாக ராஜேந்திரன் திட்டியுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரனிடம், மாரிச்செல்வம் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மாரிச்செல்வத்தை அவரது மனைவி உமா, உறவினர்கள் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரன், தனது நண்பர்கள் சேது (24), சூர்யா (21) ஆகிய இருவரை தன்னுடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு வந்து மீண்டும் மாரிச்செல்வத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில் ராஜேந்திரன், சூர்யா ஆகிய இருவரும் மாரிச்செல்வத்தை பிடித்துக்கொள்ள, சேது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிச்செல்வத்தின் வயிறு, கை , தொடை ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.