தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2022, 8:18 AM IST

ETV Bharat / state

மயிலாடுதுறையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீது தாக்குதல்... 3 பேர் கைது...

மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

மயிலாடுதுறை ரயில் நிலையத்தின்ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பக்கிரிசாமி(47) என்பவர் தீபாவளியையொட்டி, நேற்று (அக்.25) இரவு பணியில் இருந்தார். அப்போது ரயில்வே பிளாட்பாரத்தில் நின்ற சிலர் கூச்சல் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதனால் பக்கிரிசாமி, அங்கு சென்று அவர்களிடம் கூச்சலிடுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கும், ரயில்வே காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் திடீரென்று பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பிடிங்கி உடைத்ததோடு அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து பக்கிரிசாமி மயிலாடுதுறை ரயில்வே இரும்புபாதை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மயிலாடுதுறையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரரை தாக்கிய மூவர் கைது

அந்த புகாரின் தனிப்படை போலீசார் மிரட்டல் விடுத்தவர்களை சிசிடிவி கேமராப் பதிவுகளை கொண்டு அடையாளம் காண்டு மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு, கங்கை நகரைச் சேர்ந்த விஜய்(21), அஜித்குமார்(20), கிட்டப்பாத்தெருவை சேர்ந்த என்.விஜய்(22) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: இன்று அமலாகிறது புதிய மோட்டார் வாகனச் சட்டம்... வாகன ஓட்டிகளே கவனம்...

ABOUT THE AUTHOR

...view details