தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2021, 10:05 AM IST

ETV Bharat / state

வீட்டு கூரையைப் பிரித்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது

நாகை: மயிலாடுதுறையில் கூரையை பிரித்து வீடுபுகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நகைகளை மீட்டனர்.

வீட்டு கூரையை பிரித்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது
வீட்டு கூரையை பிரித்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகத்துக்குட்பட்ட பர்மா காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (41). இவர், கடந்த 17ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் பூம்புகார் சென்று திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கூரையைப் பிரித்து, வீட்டில் வைத்திருந்த இரண்டரை பவுன் எடை கொண்ட 2 தங்க செயின்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தனிப்படை சிறப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக், செந்தில் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த கண்ணையன் மகன் ஐயப்பன் (29) என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதை அறிந்த தனிப்படை காவல்துறையினர், அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இரண்டரை பவுன் எடை கொண்ட 2 தங்க செயின்களை ஐயப்பனிடமிருந்து மீட்டு, மயிலாடுதுறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:சினிமாவை மிஞ்சிய ஓசூர் கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details