நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் உள்ள சம்பந்தர் கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 7.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படித்துறை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
படித்துறை கட்டிவிட்டு குளத்தின் மையப்பகுதியில் உள்ள நந்தி மண்டபத்தை சுற்றி 10 அடி ஆழத்திற்கு குளத்தை ஆழப்படுத்திவிட்டு அதற்கு தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது வாய்க்காலில் வந்த தண்ணீரை குளத்தில் நிரப்பியபோது தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.