தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2019, 6:03 PM IST

ETV Bharat / state

வீட்டை காலி செய்யக்கோரி மிரட்டியதால் முதியவர் அதிர்ச்சியில் மரணம்!

நாகை: மயிலாடுதுறையில் பணத்தை திருப்பித் தராமல் ஒத்திக்கு இருக்கும் வீட்டைக் காலி செய்யக்கோரி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tenent problem, old man died

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை துபாஷ்தெரு, பட்டமங்கலம் தெரு பகுதியில் ஜர்ஜிஸ் என்பவருக்கு சொந்தமான வீடுகள், இடம் மற்றும் கடைகள் உள்ளது. ஜர்ஜிஸ் வெளிநாட்டில் இருப்பதால் இடத்தை பராமரிப்பதற்கும், வீடுகள் ஒத்தி மற்றும் வாடகைக்கு விடுவதற்காக பவர் ஏஜண்டாக உறவினர் தாஜூதீன் என்பவரை நியமித்துள்ளார்.

துபாஷ்தெருவில் உள்ள 8 வீடுகளில் 6 வீட்டிற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் என்று ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டத் தொகையை பவர் ஏஜெண்ட் தாஜ்தீனிடம் ஒப்பந்தம் போட்டு ஒத்திக்கு வசித்து வருகின்றனர். இதில் பவர் ஏஜெண்ட் தாஜூதீன் கடந்த மாதம் இறந்துள்ளார்.

இதனையடுத்து இடத்தின் உரிமையாளர்களிடம் ஒத்திக்கு இருப்பவர்கள் முறையிட்டபோது ஒப்பந்தங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும் சாமிநாதன் என்பவர் தலைமையில் கடந்த வாரம் நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

வீட்டை காலி செய்ய கோரி மிரட்டியதால் முதியவர் அதிர்ச்சியில் மரணம்!

இந்நிலையில் இன்று காலை அடியாட்களை வைத்து ஒத்திக்கு இருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு வரதராஜன்(70) என்ற முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். தங்களுடைய பணத்தை திருப்பித் தராமல் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இறந்த வரதராஜன் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details