தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு! - புதிய மாவட்டத்திற்க்கான தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறை: புதிய மாவட்டத்திற்க்கான தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, மாவட்ட ஆட்சியர் லலிதா, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறையில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு
மயிலாடுதுறையில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு

By

Published : Feb 25, 2021, 2:32 PM IST

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் மார்ச் மாதம் அறிவித்தார்.

இதையடுத்து, புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கி, மாவட்ட முகாம் அலுவலகமான மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரா.லலிதா பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தெற்கு வீதியில் இருந்த வணிகவரித் துறை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டு, ரூ.5 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில் தற்காலிக கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ரிப்பன் வெட்டி தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, புதிய கட்டடத்தில் பணிகளை துவங்கிய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை: அரசால் தடைசெய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details